வருக

தளத்தை பற்றிய கருத்துகள் வரவேற்கப்படும்

தேடுக

Sunday, 21 October 2012

பேஸ் புக்கில் ரசித்தவை


 

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு மக்களை எப்படியெல்லாம் யோசிக்கவைத்துள்ளது என்பதற்கு இந்த கார்ட்டூன் ஒரு உதாரணம்;

 

எல்லாம் சரி இந்த சிஸ்டப்படி விளக்கு எரியவிட்டால் பெட்ரோல் பட்ஜெட் எகிறுமே,அதுனாலே சைக்கிள் டைனமோ விளக்கு வெளிச்சத்தில் சாப்பிடுவது போல அடுத்த படத்தை யாராவது போட முயற்சிக்கலாமே

 

 


 

 

 

இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ

 பாக்கிஸ்தான் உதவுகிறது

------உள் துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே.

 

??????

 உலக மகா கண்டுபுடிப்புடா!!!

 இந்தியாவின் புதிய "Security Scientist" இவர்தானா?

 

 

 

 

 

"சூரியசக்தி என்றால் சூரியனில் இருந்து எடுப்பது. இதற்கும் உதயசூரியனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூரியனே மறுத்தாலும் அதில் இருந்து சக்தி எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்."

 

-சூரியசக்தி மின்சார புத்தக வெளியீடு.

முதல் பதிப்பு- 2012.

உரிமை- புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

 

 

 

 

நித்யானந்தா சொன்னதை எதுவும் செய்யவில்லை.ஒரு பைசா கூட ஆதீனத்திற்கு கொடுக்கவில்லை - அருணகிரி

 

:>>அந்த ஒரிஜினல் CD கூட கொடுக்கலையா சாமி

 

 

ஆதீனத்தின் அடுத்த வாரிசு பற்றி இப்போது எந்த முடிவும் இல்லை - மதுரை ஆதீனம்

 

:>>அடுத்த CD வந்த பொறவுதான், கனாவில வருவேன்னு சிவபெருமான் சொல்லிட்டாரா சாமி

 

 

 

 

 

ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன்: எஸ்.தாணு

 

:>>செருப்பு ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் சார்

 

 

 
 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Friday, 19 October 2012

விளையாடு

ஒளிகண்டு விளையாட்டு (ஐஸ்-பாய்/ஐஸ் நம்பர் 1) Hide and Seek..




ஒரு விளையாட்டுக்கு இத்தனை பெயரா என வியப்பாக இருக்கிறதா? அனைத்துப் பெயர்களும் விளையாடும் முறையும் கிட்டத்தட்ட ஒரே விளையாடைத்தான் குறிக்கின்றன.இந்த விளையாட்டுடன் என் அனுபவம் பற்றி முதலில் பார்க்கலாமா? (இல்லைன்னு சொன்னாலும் விடமாட்டேன் :) )



"எங்கள் ஊர் சித்திரைத்திருவிழா.மாரியம்மன் கோவிலை சுற்றி மக்கள் கூட்டம் நிரம்பி இருக்கிறது.கூட்டத்துக்குள் அங்கும் இங்கும் சில சிறுவர்கள் ஓடிக்கொண்டிருப்பது தெரிகிறது.அவர்கள் எங்கெங்கோ போய் மறைகிறார்கள்.ஒருவன் திருதிருவென விழித்துக்கொண்டு, காணாமல் போன பிள்ளைபோல மற்றவர்களைத் தேடுகிறான்.திடீரென பின்னாளிருந்து ஒருவன் அவன் முதுகில் வேகமாக தட்டி,"கப் ஐஸ்!" என சொல்ல,.இவன் மீண்டும் ஆட்டமிழந்த சோகத்தில், ஓடிச்சென்று அந்த மரத்தின் பின்னால் நின்று 1,2,3..என எண்ணத்துவங்குகிறான்...." ஒவ்வொரு ஆண்டும்,திருவிழா சமயத்தில் இப்படி நாங்கள் விளையாடுவது வழக்கம்.ஒளிந்து கொள்ளப்போன குழந்தைகளில் நானும் ஒருவன்!

முதலில் இந்த "ஒளிகண்டு" விளையாட்டைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன்னால் விளையாட்டினால் விளையும் நன்மைகளைப் பற்றி பார்த்துவிடலாம்.

குழந்தைகள் இந்த விளையாட்டினால் பெரும் நன்மைகள்:

1.துப்பறியும் திறன் ( Detective capacity )

2.திட்டமிடல் ( Planning )

3.மேம்பட்ட விழிப்புணர்வுத் திறன் (Extra Awareness )

இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போமா?



விளையாட தேவை:

  • 1.உங்கள் விருப்பம். குறைந்தபட்சம் 5 பேர்.
  • 2.திறந்தவெளி/பொது இடம் (கோவில்,பள்ளி,சந்தை,..)

விளையாடும் முறை:

1.துவக்கவீரரைத் தேர்வுசெய்தல்.


2.துவக்கும் நபர், மரம் அல்லது சுவற்றைப் பார்த்தபடி, கண்களைமூடி 1 முதல் 10 வரை சத்தமாகச் சொல்ல வேண்டும்.




3.அதே நேரத்தில் மற்றவர்கள் அவர்களின் விருப்பப்படி எங்காவது போய் ஒளிந்துகொள்ளவும்.



4.தேடிக்கொண்டு வருபவர், ஒளிந்திருக்கும் அனைவரையும் கண்டுபிடிக்கவேண்டும்.அப்படி ஒவ்வொருவரைக் கண்டுபிடிக்கும் போதும் "ஐஸ் நம்பர்" எனச்சொல்லி,அவர் எத்தனையாவது ஆள் என்பதையும் சத்தமாகச் சொல்லவேண்டும். எகா:"ஐஸ் நம்பர் 1, ஐஸ் நம்பர் 2"..









5.மற்றவர்களைத்தேடும்போது, ஒளிந்திருப்பவர் தேடுபவரின் பின்னால்,அவர் அறியாமல் வந்து முதுகைத்தட்டி, "கப் ஐஸ்" என சொன்னால், அவர் மீண்டும் விளையாட்டைத் துவங்கவேண்டும்.



5.அப்படி இல்லாமல்,அனைவரும் கண்டுபிடிக்கப் பட்டால், "ஐஸ் நம்பர் 1" ஆட்டத்தைத் துவங்குவார்.



6.சலிக்கும் வரை விளையாடலாம்.(சிலநேரம் ஒரே ஆள் மீண்டும் மீண்டும் ஆடமிழக்கும் பரிதாபங்களும் நிகழும்)

Thursday, 11 October 2012

கிரிஸ் கெயில் டான்ஸ்